;
Athirady Tamil News

உக்ரைனுக்கு எப் 16 போர் விமானங்கள் அனுப்பப்பட மாட்டாது – அதிபர் ஜோ பைடன்!!

0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போரால் வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை போன்ற தாக்கங்கள் நீடித்து வருகின்றன. எனினும், இரு நாடுகளும் சண்டையை கைவிடாமல் உள்ளன. இதற்கிடையே, கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. டோனெட்ஸ்க் பகுதியில் பாக்முத், வூலெடார் மற்றும் பிற பிரிவுகளிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. போரை நீட்டித்துச் சென்று எங்களை தோற்கடிக்க ரஷியா விரும்புகிறது.

கடும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை கொண்டு விரைவாக ரஷிய படைகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்தார். இந்நிலையில், உக்ரைனுக்கு எப்-16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ரஷியாவை எதிர்க்க போர் விமானங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் முக்கிய நட்பு நாடான போலந்திற்குச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் செல்லும் தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஏ.பி.எப். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.