;
Athirady Tamil News

மலையக சமூகத்தின் ‘ஆதர்ஷ சிற்பி’ போட்டிகள்!!

0

மலையக சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சிரார்த்த தினத்தையொட்டி கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

கவிதைக்கான தலைப்புக்கள்.

 தடம் பதித்த தானைத் தலைவன்

 இலக்கு நோக்கி இனிய பயணத்தில் ஆறுமுகன் தொண்டமான்

 பாட்டாளி வடுதலையின் கூட்டாளி

 தவைரது புகழைச் சொல்ல நாள் போதுமா

 உழைப்போருக்கு தோழன், ஏய்த்து பிழைப்போருக்கு…

கட்டுரைக்கான தலைப்புக்கள்

 ஆளுமையின் அடையாளம் அமரர் ஆறுமுகன் தொண்டமான்

 இன்றைய மலையகத்தின் இனிய நினைவுகளில் அவர்

 அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பாதை

 இளைய தலைமுறையின் இங்கிதமான வழிகாட்டி

 சமூக எழுச்சிக்கு வித்திட்ட வீரமகன்

போட்டிகளின் விதிமுறைகள்

 கவிதை 150 சொற்களுக்குள்ளும், கட்டுரை 800 சொற்களுக்குள்ளும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

 படைப்புக்கள் A4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டும். பெயர், முகவரி தனியாக ஒரு தாளில் எழுதப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

 அச்சு, இலத்திரணியல் ஊடகங்களில் ஏற்கெனவே வெளியானவை ஏற்றுக்கொள்ளப்பட மட்டாது.

படைப்புக்கள்; போட்டி ஏற்பாட்டாளர், இ.தொ.கா, இல 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் 15.03.2023க்கு முன்னர் அனுப்பிவைக்கப்படல் வேண்டும். மேலதிக தகல்களுக்கு 071-6876548 அல்லது 070-4329131 தொடர்பு கொள்ளவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.