;
Athirady Tamil News

காதல் மனைவியின் நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொலை செய்த கணவர்!!

0

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், திருவூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் நகுல் மீரா. கட்டிட மேஸ்திரி. முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது கட்டிட சித்தாள் வேலை செய்து வந்த ஜோத்ஸ்னா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகும் ஜோத்ஸ்னா கட்டிட வேலைக்கு சென்று வந்ததால் ஷேக் நகுல் மீராவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் ஷேக் நகுல் மீராவுக்கு மனைவியின் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஷேக் நகுல் மீரா அவரது மனைவி குளிக்கும் போது அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் நிர்வாண படம் பிடித்தார். மனைவியின் செல்போன் எண்ணுடன் நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் அவரது ரேட் எவ்வளவு என கேட்டு பதிவு செய்தார். இந்த படங்கள் வேகமாக பரவியது. சமூக வலைதளத்தில் இளம்பெண்ணின் நிர்வாண படத்தை பார்த்தவர்கள் அவரது செல்போனில் தொடர்பு கொண்டனர்.

இதனால் அவமானம் அடைந்த ஜோத்ஸ்னா இதுகுறித்து முசுனுர் போலீசில் புகார் செய்தார். போலீசார் யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என ஜோஸ்த்னாவிடம் கேட்டபோது தனது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் நகுல் மீராவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கொல்லப்பள்ளியில் ஷேக் நகுல் மீரா நடந்து சென்ற ஜோஸ்த்னாவை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். மனைவி என்றும் பாராமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ஜோஸ்த்னா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

இதனை கண்ட அவரது இளைய மகன் ஓடிச் சென்று தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஜோஸ்த்னா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் நகுல் மீராவை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.