;
Athirady Tamil News

யாழில் இடம்பெற்ற விபத்தில் கொழும்பு வாசி உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கொழும்பை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பழனி கணேசதாசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி தெல்லிப்பளை பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி , யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிறிதொரு நபருடன் சென்ற வேளை , மாவிட்டபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி கொழும்பு வாசி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.