;
Athirady Tamil News

திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி!!

0

திருக்கேதீச்சரப் பெருமானின் சிவராத்திரி உற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை 18.02.2023 காலை 5 மணிக்கு திருவனந்தல் பூசையுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. முதலாம் சாமப் பூசை அன்று இரவு 8 மணிக்கும் இரண்டாம் சாமப் பூசை இரவு 10.30 மணிக்கும் மூன்றாம் சாம இலிங்கோற்பவ பூசை நள்ளிரவு 12.15 மணிக்கும் நான்காம் சாமப் பூசை பின்னிரவு 3 மணிக்கும் நடைபெற்று தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெறும் அதனைத் தொடர்ந்து ஞாயிறு அதிகாலை சுவாமி பாலாவி தீர்த்தக்கரைக்கு எழுந்தருவார்.

சிவராத்திரியையொட்டி ஆலய வெளிவீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட அலங்கார மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதில் தமிழக மற்றும் இலங்கைக் கலைஞர்களின் ஆன்மீக உரைகள் மற்றும் பண்ணிசைக் கச்சேரி முதலியன இடம்பெறவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.