;
Athirady Tamil News

ஜப்பானில் ஒரே இடத்தில் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் – இயற்கை பேரழிவென அச்சம்!!

0

ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள், கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஹோன்ஷுவில் கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூடுவது இயற்கை பேரழிவின் தொடக்கத்தைக் குறிக்கிறதென்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தீவில் மர்மமான முறையில் காக்கைகள் கூடும் காணொளி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.