;
Athirady Tamil News

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு- ராணுவ வீரர் கொலை தொடர்பாக புகார்!!

0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து மாலையில் சென்னை ஓமந்தூரார் மருந்துவமனையில் இருந்து போர்நினைவு சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது, ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக கவர்னரிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், இந்திய ஆயுதப் படைகளின் முன்னாள் வீரர்கள் மற்றும் தலைவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது தொடர்பாக மனு அளித்து, இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.