;
Athirady Tamil News

“மன்னித்துவிட்டோம் வந்து இணையுங்கள்” !!

0

ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பக்கம் தாவிய எம்.பிக்களை தாம் மன்னிப்பதாகவும், இதனால் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் தேர்தல் தொடர்பில் கதைக்கின்றனர். வேண்டுமென்றால் முதலில் அவர்கள் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தேர்தலிலாவது வென்று காட்டாட்டும். நீங்கள் தனியாக கட்சியை அமைத்துள்ளீர்கள். நீங்கள் நண்பர்களே. எமது கட்சியில் இருந்து பிரிந்துவந்து உங்களுடன் இணைவார்கள் என்றே நினைத்தீர்கள் என்றார்.

எங்களின் பொதுஜன பெரமுன அப்படியே இருக்கின்றது.

நண்பர்களே நீங்கள் மீண்டும் எங்கள் பக்கம் வாருங்கள். உங்களை மன்னிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனால் எங்களுடன் வாருங்கள் மீண்டும் இணைந்து செயற்படுவோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.