;
Athirady Tamil News

திருப்பதி கோவில் தெப்போற்சவம் மார்ச் 3-ந்தேதி தொடங்குகிறது!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்போற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் வழியாக வலம் வந்து, புஷ்கரணியில் மிதக்கும் தெப்பத்தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இந்தப் தெப்போற்சவத்தால் மார்ச் மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளில் ஏழுமலையான் கோவிலில் சஹஸ்ர தீபலங்கார சேவை, மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.