;
Athirady Tamil News

எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு கட்சியின் வெற்றி உறுதி – அடித்துக்கூறும் ராஜபக்ச குடும்பம்!

0

“இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தலுக்கான வருடங்களாகும், ஆனால் எந்த தேர்தல் முதலில் நடைபெரும் என எமக்கு தெரியாது, நாட்டில் எந்த வகையான தேர்தல் நடைபெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது”

இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“வருகின்ற காலங்களில் உள்ளூராட்சிசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் இதில் எந்த தேர்தல் எப்போது நடக்கும் என எமக்கு தெரியாது.

எந்த தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவது உறுதி.

உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகளை வைத்து ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாது, நாடாளுமன்ற தேர்தல் மூலமே அதனை செய்ய முடியும்.

இருப்பினும், மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடமல் விரைவில் நடத்த வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.