;
Athirady Tamil News

துபாயில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இளம்பெண் கைது!!

0

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் பயணிகளின் உடமைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதித்தனர். இந்த நிலையில் துபாயில் இருந்து கோழிக்கோடு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பரிசோதித்தனர்.

இதில் இளம்பெண் ஒருவரை பரிசோதித்தபோது அவரது உள்ளாடைக்குள் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து ரூ.ஒரு கோடி மதிப்பிலான 2031 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கத்தை கடத்தி வந்ததாக கோழிக்கோடு மாவட்டம் நரிக்குனியை சேர்ந்த அஸ்மா பீவி (வயது 32) கைது செய்யப்பட்டார். இவர் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். எனவே அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.