;
Athirady Tamil News

19 பேரும் பிரதமரையும் தேடிச்சென்றனர் !!

0

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெற்றோலிய தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவும் கலந்துகொண்டார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை மீள இணைத்துக்கொள்வது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இதேவேளை பெற்றோலிய தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.