;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு மீண்டும் உயர்வு- இந்தியாவில் ஒரே நாளில் 4,435 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 4,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதிப்பு கடந்த 2-ந்தேதி 3,824 ஆக இருந்தது. மறுநாள் 3,641 ஆகவும், நேற்று 3,038 ஆகவும் குறைந்த நிலையில் இன்று 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 26-ந்தேதி நிலவரப்படி 4,129 ஆக இருந்தது. அதன்பிறகு தற்போதுதான் தினசரி பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,025 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 711, டெல்லியில் 521, கர்நாடகா, குஜராத்தில் தலா 324, இமாச்சலப்பிரதேசத்தில் 306, தமிழ்நாட்டில் 198, உத்தரபிரதேசத்தில் 179, அரியானாவில் 193, கோவாவில் 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 33 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,508 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 79 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 1,912 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 23,091 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 4 பேர், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தானில் தலா ஒருவர் என நேற்று ஒரே நாளில் 11 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 4-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,916 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.