;
Athirady Tamil News

மேற்கு வங்காளத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்!!

0

மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்தவர் ஜூடான் மகாதோ. இவரது மனைவி உத்தரா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஜூடான் மகாதோ கடந்த சில வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மகனும் தந்தையை பல இடங்களில் தேடினார். அப்போது வீட்டுக்கு வெளியே தந்தையின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஜூடான் மகாதோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஜூடான் மகாதோவின் மனைவி உத்தரா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த சேத்திரபால் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

எனவே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்க அவர் உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, உத்தராவுக்கும் சேத்திரபாலுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இதனை அறிந்த ஜூடான் மகாதோ மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உத்தரா, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சலாக இருந்த கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து கள்ளக்காதலன் துணையுடன் கணவர் ஜூடான் மகாதோவை கொலை செய்து பிணத்தை வெளியே வீசியுள்ளார். அதன்பின்பு ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ளக்காதலனுடன் வாழ்க்கை தொடர முடிவு செய்துள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் சிக்கி கொண்டார். இதையடுத்து போலீசார் உத்தராவை கைது செய்தனர். மேலும் ஜார்கண்டில் பதுங்கி இருந்த அவரது கள்ளக்காதலன் சேத்திரபாலுவும் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.