;
Athirady Tamil News

சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் பகுதிகள் !!

0

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (12) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும்போது, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

மேலும், சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதன்படி, இன்று (12) மதியம் 12:11 க்கு மாங்குளம், பெரியகுளம், குறட்டியாவ, மொறவெவ மற்றும் மஹதிவுல்வெவ ஆகிய பிரதேசங்களுக்கு நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.