;
Athirady Tamil News

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணி கட்சிகள் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும்: சரத்பவார்!!

0

மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. குறிப்பாக சாவர்க்கர் பற்றி விமர்சித்த ராகுல்காந்திக்கு உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கவுதம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை எதிர்க்கட்சிகள் கோரி வந்த நிலையில், அந்த குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கும் குழு விசாரணை தான் பயனுள்ளதாக இருக்கும் என்று சரத்பவார் கூறினார்.

அவரின் இந்த கருத்து காங்கிரஸ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவ்வப்போது காங்கிரசின் விமர்சனை கணைகளுக்கு தேசியவாத காங்கிரஸ் உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரத்பவாரை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சஞ்சய் ராவத் எம்.பி. உடன் இருந்தார். கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

சந்திப்பு குறித்து சரத்பவாரிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:- கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை குறித்து நானும், உத்தவ் தாக்கரேயும் ஆலோசித்தோம். கூட்டணி ஒற்றுமைக்காக சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் நடத்திய சந்திப்பில் இதற்காக உடன்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.