;
Athirady Tamil News

சீனாவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு !!

0

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றதையடுத்து, தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.