;
Athirady Tamil News

பாணந்துரை கடற்கரைக்கு வந்த ஆபத்தான விருந்தாளி!!

0

சுமார் 07 அடி அளவு கொண்ட முதலை ஒன்று பாணந்துறை கடற்கரையில் நேற்று (28) மாலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

கறித்த பகுதியில் கரையோரம் உள்ள பாறையின் அருகே முதலை இருப்பதைப் பார்த்த மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

மேலும் கடலோர காவல்படை அதிகாரிகள் வருவதற்குள் முதலை கடலுக்குள் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முதலையை கடற்கரையில் இருந்து அகற்றும் வரை கடலில் நீராடும்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.