;
Athirady Tamil News

ஆதாரம் தேவையில்லை என்றால் கருப்பு பணத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? ப.சிதம்பரம் கேள்வி !!

0

ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்து உள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம், இதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:- 2016-ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தபோதே இது சரியான நடவடிக்கை இல்லை என்று அப்போதே கூறினேன். சாதாரண சில்லறை வியாபாரத்துக்கு இந்த ரூபாய் நோட்டுக்கள் பலனளிக்காததால் அப்போது மக்கள் இதனை புறக்கணித்து விட்டனர். சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.

இப்போது கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள். ஆனால் ரிசர்வ் வங்கி ரூ. 2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் மாற்ற அடையாள சான்று தேவையில்லை, ஆதாரம் தேவையில்லை எனக்கூறியுள்ளது. அப்படி என்றால் இந்த நோட்டை பதுக்கி வைத்துள்ளவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியினர் கூறிய கருத்தும் தவறாகிவிட்டதே? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.