;
Athirady Tamil News

ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் படுகொலை!!

0

ஒடிசா மாநிலம் பர்கர் பகுதியை சேர்ந்தவர் குருதேவ் பக்.இவரது மனைவி சிவாசிகிபக்.இந்த தம்பதிகளுக்கு சூட்டாமணி (வயது 15) என்ற மகனும்,ஸ்ரீவாணி (10) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் 4 பேரும் வீட்டில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உறவினர் ஒருவருக்கும் குருதேவ் பக்குக்கும் வீடு கட்டுவது சம்பந்தமான நிலப்பிரச்சினை இருந்து வந்ததும் இதன் காரணமாக அவர் 4 பேரையும் கடப்பாரையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொன்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.