;
Athirady Tamil News

குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம்- மகனின் தலையை வெட்டி எடுத்து பையில் வைத்து சுற்றிய தந்தை!!

0

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அடுத்த குள்ளப்பாவை சார்ந்தவர் வீரய்யா. கூலி தொழிலாளி.இவரது மனைவி அலிவேலம்மா. தம்பதியின் மகன் அசோக் (வயது 25) ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. அலிவேலம்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் வீட்டு வேலைக்கு சென்றார். அசோக்கின் மனைவி லட்சுமி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தந்தையும் மகனும் மட்டும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அலிவேலம்மா தனது மகனின் வங்கி கணக்கிற்கு ரூ.5 ஆயிரம் அனுப்பி வைத்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவி அனுப்பி வைத்த பணத்திலிருந்து குடிப்பதற்கு பணம் கேட்டு வீரய்யா மகனிடம் தகராறு செய்தார். அசோக் தந்தைக்கு குடிப்பதற்கு பணம் தர மறுத்தார்.

இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக சென்று மது அருந்திவிட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அசோக் தந்தையை அடித்தார். இதில் ஆத்திரமடைந்த வீரய்யா அருகில் இருந்த கல்லை தூக்கி மகனின் தலையில் போட்டார். இதில் அசோக்கின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகனின் தலையை தனியாக வெட்டி எடுத்தார். மகனின் தலையை ஒரு பையில் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக சுற்றி வந்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். மகனின் தலையை மேஜையில் வைத்தபடி மது வாங்கி குடித்தார். வீரய்யா தனது மகனின் தலையை பையில் போட்டுக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஊரை சுற்றி வந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் மதுபான கடைக்கு வந்து அங்கு மது குடித்துக் கொண்டு இருந்த வீரய்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.