;
Athirady Tamil News

மூத்த இராஜதந்திரி தனபால காலமானார் !!

0

மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் .

மாரடைப்பு காரணமாக இன்று காலை 10 மணியளவில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரியாக இவர் பணியாற்றினார்.

அத்துடன், கலாநிதி. ஜயந்த தனபால ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் தூதுவராக பணியாற்றினார்.

1998ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் துணைச் செயலாளராகவும் அவர் பணியாற்றினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.