;
Athirady Tamil News

பாராளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக கருதுகிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி!!

0

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்தன. இந்நிலையில், புதிய பாராளுமன்ற திறப்புவிழா குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றம் என்பது மக்களின் குரல். புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடி, இது தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக் கொள்கிறார் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.