;
Athirady Tamil News

முட்டைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை!!

0

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அரச பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சில்லறை சந்தைக்கு விநியோகிக்குமாறு பெருமளவான பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட முட்டை தொடர்பான துறைகளுக்கு மாத்திரமே விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது உள்ளூர் முட்டை உற்பத்தி 4 மில்லியனாக காணப்படுகின்றது.

இதேவேளை, இலங்கைக்கு முட்டை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 02 பண்ணைகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.