;
Athirady Tamil News

சிசு செரியவில் 30% பெற்றோர் ஏற்க வேண்டும்!!

0

பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் ”சிசு செரிய” பஸ் சேவைகளை நிறுத்த முடியும் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்ன, அந்த ​சேவையை கொண்டுநடத்துவதற்கு அரசாங்கம் 70 சதவீதம் அர்ப்பணிக்கிறது. மீதமுள்ள 30 சதவீதத்தை பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து​கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிசு செரிய பஸ் சேவையை கொண்டு நடத்துவதற்கு நிவாரணம் கிடைக்காவிடின், எரிபொருட்களை வழங்காமல் விடலாம். அத்துடன் அந்த சேவை நின்றுவிடும். அந்த பஸ்களுக்கான கட்டணங்களில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படாது விடின், சேவையை முடக்குவதே ஒரே வழியாகும்.

அத்துடன், அந்த 30சதவீதத்தை கூட அர்பணிக்க முடியாத, ஏழ்மையான பெற்றோர் இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகளுக்கு இலவச சேவையை வழங்கவேண்டும். அதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.