தரமற்ற மருந்து இன்னும் பயன்பாட்டில் உள்ளது!!
பேராதனை வைத்தியசாலையில் இரண்டு சிறுவர்களின் உயிரிழப்பிற்கு காரணமெனக் கூறப்பட்ட தரமற்ற மயக்க மருந்தை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை திரும்பப் பெறுவதாக உறதியளித்த பின்னர் இன்னும் அது பயன்பாட்டிலுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த மயக்க மருந்தின் மூலம் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஏற்கனவே இன்னும் சில மரணங்கள் சம்பவித்திருப்பதாக அறியக் கிடைத்ததாக சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.