;
Athirady Tamil News

அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவான இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி!

0

அவுஸ்திரேலியாவில் நடந்த லொத்தர் சீட்டிழுப்பில் நபர் ஒருவர் மாபெரும் தொகையினை வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை குறித்த நபர் வென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது அவுஸ்திரேலிய வரலாற்றில் பதிவாகியுள்ள இரண்டாவது பெரிய லொத்தர் வெற்றி எனக் கூறப்படுகின்றது.

சிட்னியில் வசிக்கும் நபர் ஒருவர் அந்நாட்டின் பவர்பால் (Powerball) லொத்தர் சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர் பெறுமதியான முதலாவது பரிசை வெற்றி கொண்டுள்ளார்.

இது தொடர்பில் வெற்றியாளரிடம் கேட்டபோது, இந்த பணத்தில் வீடு வாங்குவதே தனது முதல் விருப்பம் எனக் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.