உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யா..! ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை !!

உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யாவின் ஆயுதப் படைகளை ஐ.நா இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு உக்ரைனில் 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 518 குழந்தைகள் அங்கவீனர்களாகியதாகவும், மருத்துவமனைகள் மீது 480 தாக்குதல்களை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, தொண்ணூற்றொரு குழந்தைகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 80 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 175 குழந்தைகள் காயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உக்ரைன் குற்றவாளிகள் குறித்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.