;
Athirady Tamil News

குருந்தூர்மலையில் சரத்வீரசேகரவை எச்சரித்தார் நீதிபதி !!

0

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை (04) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகைதந்திருந்தார்.

இந் நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாது எனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர்மலை விவகார வழக்கு ஒத்திவைப்பு !!

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதித்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்-அங்கஜன்!!

குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம்; ரவிகரன் மற்றும் மயூரன் கைது !!

குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!!

குருந்தூர்மலை விவகாரம்; கைது வேட்டையில் பொலிஸார்!!

நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர்மலையில், புத்தர் சிலை நிறுவுதல், விசேட வழிபாட்டு முயற்சி – மக்களின் ஆர்ப்பாட்டத்தால் நிறுத்தம்!! (படங்கள்)

குருந்தூர்மலைக்கு விரைந்தது கூட்டமைப்பு !!

குருந்தூர் மலை விவகாரம்; நீதிமன்றில் சுமந்திரன்!!

பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!!! (படங்கள்)

நீதிமன்ற கட்டளை வலுவற்றதா?:சிறிதரன் கேள்வி !!

முல்லைத்தீவில் தொடரும் அவலம்!! (PHOTOS)

கர்மவினை வாழ விடாது ; பௌத்தம் சொல்கிறது என்கிறார் ஸ்ரீதரன் எம்.பி..!!

குருந்தூர் மலை விவகாரம்: 23 ஆம் திகதி விசாரணை !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.