;
Athirady Tamil News

இம்ரான்கானுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை !!

0

தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) பிணையில் வெளிவர முடியாத கைது பிடியாணையை பிறப்பித்துள்ளது.

இம்ரான் கான் மற்றும் பவாத் சவுத்ரி தனிப்பட்ட முறையில் அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முன் முன்னிலையாகவில்லை என்று கூறப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பிடிஐயின் பல தலைவர்கள் மீது அவமதிப்பு வழக்குகள் தொடங்கப்பட்டன.

அவர்களுக்கு எதிராக பல அழைப்பு வழங்கப்பட்ட போதிலும், கட்சித் தலைவர்கள் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முன் முன்னிலையாகவில்லை.

இதனைத்தொடர்ந்து பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் இரண்டு பேரும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் முன்னிலையாகாததால், பிணையில் வெளிவர முடியாத கைது பிடியாணை பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.