;
Athirady Tamil News

துணைவேந்தர் பதவி விலகக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!

0

புதுவை பல்கலைக்கழகத்தில் போலி பில் தயாரித்து நிதி மோசடி குறித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் துணைவேந்தர் குர்மீத்சிங் பதவி விலக வலியுறுத்தி நேற்று நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக மதர்தெரசா உணவு விடுதி அருகே இரவில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.