;
Athirady Tamil News

பாலின அறுவை சிகிச்சை: குழந்தையின் தனியுரிமையை மீறும்- கேரள ஐகோர்ட்டு கருத்து!!

0

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தெளிவற்ற பிறப்புறுப்பு கொண்ட தங்களது 7 வயது குழந்தைக்கு பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில் மைனருக்கு சம்மதமின்றி பாலியல் அறுவை சிகிச்சை செய்வது, அந்த குழந்தையின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- பிறப்புறுப்பு மறு சீரமைப்பு அறுவை சிகிச்சைக்குஅனுமதி வழங்குவது இந்திய அரசியலமைப்பு சட்டம் 14, 19 மற்றும் 21-வது பிரிவுகளின கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை தடுக்கும். ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது குழந்தையின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மீறவதாகும். இந்த அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை மாற்றப்பட்டதை தவிர, இளமை பருவத்தை அடைந்ததும், குழந்தை பாலினத்தை நோக்கிய நோக்கநிலையை வளர்த்துக் கொண்டால் அத்தகைய அனுமதியை வழங்குவது கடுமையான உணர்ச்சி மற்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

மனுதாரர்களின் குழந்தையை மருத்துவ வாரியம் 2 மாதங்களுக்குள் பரிசோதித்து, தெளிவற்ற பிறப்புறுப்பு காரணமாக குழந்தை உயிருக்கு ஏதேனும் ஆபத்தான் சூழ்நிலையை எதிர்கொள்கிறதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அப்படியென்றால் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கலாம். இவ்வாறு ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.