;
Athirady Tamil News

கூட்டநெரிசலை தவிர்க்க தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில்!!

0

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம்-நெல்லை இடையே நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில், நாளை மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06051) நாளை மறுநாள் காலை 4.15 மணிக்கு நெல்லை சென்றடையும். இதேபோல, 12-ந்தேதி மாலை 4.50 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06052) 13-ந்தேதி காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.