;
Athirady Tamil News

பருத்தித்துறை – கற்கோவளத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று திங்கட்கிழமை காலை குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது.

பொலீசார் மீது நம்பிக்கை இல்லை. பருத்தித்துறை பொலிசார் கஞ்சா கடத்தல்காரர்கள் உடன் தொடர்பு வைத்து சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இராணுவத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை. யாழ் மாவட்ட இராணுவ தளபதி அவர்களே கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால் அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.