;
Athirady Tamil News

மனைவியை கொன்று உடலை மறைத்து வைத்த கணவர்- விடுதிக்கு சென்று மகளை பார்த்து விட்டு தற்கொலை!!

0

தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் அடுத்த தேயநகர் காலனி சேர்ந்தவர் பிரவீன் (வயது 50). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி லாவண்யா (42). டெய்லர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் உள்ளார். இவர் கரீம் நகரில் உள்ள விடுதியில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரவீன் குடும்பத்தினர் கீழ்த்தளத்திலும், அவரது பெற்றோர் முதல் தளத்திலும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன் வீட்டில் இருந்த கல்லை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் லாவண்யா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வீட்டில் மறைத்து வைத்தார். நேற்று முன்தினம் காலை கரீம் நகர் வந்த பிரவீன் விடுதியில் தங்கி இருந்த மகளை பார்த்துவிட்டு நலம் விசாரித்தார்.

பின்னர் வீட்டிற்கு வந்த பிரவீன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தற்கொலைக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது சடலங்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குங்கள். சடங்குகள் எதுவும் செய்ய வேண்டாம். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. பிறப்பைப் போலவே இறப்பும் இயற்கையானது என கூறியிருந்தார். இதனையடுத்து பிரவீன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரவீனின் நண்பர்கள் பலமுறை போன் செய்தோம் பிரவீன் எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது மனைவி ரத்த வெள்ளத்திலும், பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பிரவீனின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.