;
Athirady Tamil News

ஜனாதிபதி யால தேசிய பூங்காவிற்கு விஜயம்!! (PHOTOS)

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யால தேசிய பூங்காவிற்கு நேற்று (19) ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

அதன்போது யால பூங்காவின் உள்நுழைவு பற்றுச்சீட்டுகளை நிகழ்நிலை மூலம் கொள்வனவு செய்யக்கூடிய வழிமுறையை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பூங்காவில் வறண்டு கிடக்கும் குழிகளுக்கு நீர் நிரப்பும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இந்த விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்களும், ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினருடன் இணைந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.