;
Athirady Tamil News

வானில் அரிய நிகழ்வு – நீல நிறத்தில் காட்சியளித்த சூப்பர் புளூ மூன்!!

0

ஒரே மாதத்தில் வழக்கமாக ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி வரும்.

அந்த வகையில் ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, 2-வதாக தோன்றும் முழு நிலவு புளூ மூன் (நீல நிலவு) என குறிப்பிடுகிறார்கள். நிலவு பூமியை சுற்றி வர ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால் 29.531 நாட்கள் ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு 31 நாட்களுக்குள் 2 புளூ மூன்கள் தென்பட்டன.

பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி இதே போல் புளூ மூன் தென்பட்டது. இதை தொடர்ந்து இன்று வானில், புளூ மூன் தென்பட்டது. இதனை பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மக்கள் புளூ மூனை கண்டுகளித்ததோடு, அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.