;
Athirady Tamil News

ஜெரோமின் FR மனு பரிசீலனைக்கு வருகின்றது !!

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை செப்டம்பர் 21 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது..

இதேவேளை, இந்த மனு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இது தொடர்பான மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.