;
Athirady Tamil News

“ரணில் குதித்தால் சஜித் குதிக்கமாட்டார்” !!

0

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

டலஸ் அல்லது மைத்திரிபால அல்லது அநுர திசாநாயக்க அல்லது ஒருவரைத் தள்ளிவிட்டு சஜித் பிரேமதாச அணி இந்த ஜனாதிபதித் தேர்தலை தவிர்க்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் பிரேமதாச நிச்சயமாக யால காட்டு பகுதிக்கு சென்றுவிடுவார். எனத் தெரிவித்த ரங்கே பண்டார, இப்போது யால காட்டில் நுளம்புகளை விரட்டி உண்ணிகளை அடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.