;
Athirady Tamil News

ரயில் சேவைகள் தாமதம்!!

0

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குடுவெவ பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்றுவருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பில் இருந்து பயணிக்கும் ரயில்கள் பங்கதெனிய ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளத்திலிருந்து வரும் ரயில்கள் நாத்தாண்டிய ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மரத்தினை அகற்றும் பணி முடியும் வரை அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் சிறிது தாமதம் ஏற்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.