;
Athirady Tamil News

ஈரானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து : 6 பேர் பலி !!

0

ஈரானில் டாம்கான் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் நேற்று (04) இடம்பெற்ற வெடிவிபத்தில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 400 மீற்றர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கி அங்கேயே உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (05) காலை குறித்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவ்விபத்துக் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2021ஆம் ஆண்டு இந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

2017இல் ஆசாத் ஷாஹர் நகரில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 43 தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.