;
Athirady Tamil News

தனிமையில் இருந்த போது சிக்கிய கணவன்-கள்ளக்காதலியை கட்டி இழுத்து சென்ற மனைவி!!

0

ஆந்திர மாநிலம், சத்திய சாய் மாவட்டம், ஊது குருவை சேர்ந்தவர் உசேன். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். உசேன் கிழக்கு நகரில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி கள்ளக்காதலை கைவிட வேண்டும் என கணவரை எச்சரிக்கை செய்து வந்தார். மனைவியின் எச்சரிக்கையை மீறி உசேன் காதலியுடன் நெருக்கமாக பழகி வந்தார். உசேனின் மாமனார், மாமியார் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று காலை உசேன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு திலக் நகரில் உள்ள தனது காதலி வீட்டுக்கு சென்றார். இதனை கண்ட உசேனின் மாமனார், மாமியார் இதுகுறித்து தனது மகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பெற்றோருடன் உசேனின் கள்ளக்காதலி வீட்டிற்கு வந்த அவரது மனைவி இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். பின்னர் இருவரின் கைகளையும் பின்புறமாக கட்டி தலை முடியை பிடித்து தர தரவென இழுத்து சென்றார். இதனைக் காண அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடி நின்று ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.