;
Athirady Tamil News

கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!

0

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அப்போது மக்களைத் தூண்டினார் என்றும் இவ்வாறானவர்களையும் கோட்டாவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக செயற்பட்டவர்களாக கருத வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹெக்டர் அப்புஹாமியின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி மற்றும் அதன் உள்ளடக்கம் பாரதூரமானது. நாட்டு மக்களை கொன்று இரத்தத்தின் ஊடாக ஒரு தரப்பினர் ஆட்சியை கைப்பற்றியிருந்தால் அந்த சதி தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விடயம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?” என்று அப்புஹாமி எம்.பி கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிளித்த அமைச்சர் மனுஷ, “2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த காணொளி விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4/21 தாக்குதல்: சர்வதேச விசாரணையை கேட்கிறார் சஜித்!!

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் – 4 செய்திச்சேவை அறிவிப்பு!!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.