;
Athirady Tamil News

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு!!

0

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் இன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ரஷிய வெளியுறவுத்துறை செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புதினுக்கு பதிலாக, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.