;
Athirady Tamil News

பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படை இயக்குனர் மரணம்!!

0

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பிரிவின் இயக்குனராக இருந்து வந்தவர் அருண்குமார் சின்கா (வயது 61) இவர் கல்லீரல் பிரச்சினை காரணமாக அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அருண்குமார் சின்கா கேரள மாநிலத்தில் பல்வேறு பதவிகளை வகித்தவர். உளவுத்துறை , எல்லைப்பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் பணியாற்றிவர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு இயக்குனராக இருந்து வந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.