;
Athirady Tamil News

புடினின் ரகசியங்கள் அறிந்தவர் திடீர் மாயம் : ரஷ்யாவில் புதிய அதிர்வு !!

0

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நல ரகசியங்கள் அறிந்த சிறப்பு மருத்துவர் திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புடினின் முதன்மை மருத்துவரும் ரஷ்ய தடுப்பூசி நிறுவனத்தின் தலைவருமான விக்டர் ட்ருகின் (59 வயது) என்பவரே திடீரென்று மாயமாகியுள்ளார்.

ரஷ்யாவின் முன்னணி தடுப்பூசி நிறுவனத்தில் பரவலாக ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதன் தலைவரான Viktor Trukhin என்பவரின் பதவி பறிக்கப்பட்ட பின் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

ரஷ்யாவின் முன்னணி தடுப்பூசி நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாக விக்டர் ட்ருகின் தலைவராக இருந்து வருகிறார்.

சட்டத்தரணியாக பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் தடுப்பூசிகள் உற்பத்தியில் ரஷ்யாவின் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து அவருக்கு முழு அறிவும் இருந்துள்ளது.

இந்த நிறுவனமே, ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதுடன், ரஷ்ய தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கும் வகித்துள்ளது.
புடினின் உடல் நிலை விபரங்கள்

விளாடிமிர் புடினின் உடல் நிலை தொடர்பான அனைத்து தரவுகளும் தற்போது மாயமாகியுள்ள மருத்துவர் விக்டர் ட்ருகின் என்பவருக்கு தெரிந்திருந்தது என்றே கூறப்படுகிறது.

தற்போது சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று விக்டர் ட்ருகின் தொடர்பில் தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

செப்டம்பர் 3ஆம் திகதி ட்ருகினின் மகள் மாஸ்கோவில் அவரை சந்தித்துள்ளார், ஆனால் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் ஊழல் குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்படும் ஒருநாள் முன்பு விக்டர் ட்ருகின் மாயமாகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.