;
Athirady Tamil News

டெல்லியில் இருந்து வியட்நாம் புறப்பட்டுச் சென்றார் ஜோ பைடன்!!

0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்தடைந்தார். அவருடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நேற்று தொடங்கிய ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். ஜி20 டெல்லி கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

ஒருமித்த கருத்துடன் வெளியிடப்பட்ட நிலையில், மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதாக தெரிவித்தார். பின்னர் நேற்றிரவு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்தில் பங்கேற்றார். இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் 11.15 மணியளவில் வியட்நாம் புறப்பட்டு சென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.