;
Athirady Tamil News

அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் இருந்து வருவதாக தகவல்!!

0

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் குறித்த வீட்டில் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணும் அந்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் வீட்டில் ஒவ்வொரு நாளும் மர்ம சத்தங்கள் கேட்பதும் வீட்டிற்குள் மண்ணை அள்ளித் தூவுவதும் ஜன்னல் கதவுகளை அடிப்பதும், புகை போன்ற உருவம் சத்தத்துடன் வருவதும் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.

அதனை வீட்டின் உரிமையாளர் தனது தொலைபேசியில் நடுநிசி 1.00 மணியளவில் காணொளி எடுத்துள்ளார்.

எடுக்கப்பட்ட வீடியோவில் ஆவி ஒன்று நாற்காலியை பல்வேறு கோணங்களில் சுழற்சியும் ஆட வைத்தும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் தற்காலிகமாக வேறு வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.