;
Athirady Tamil News

நாசாவின் புதிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி!

0

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின், சந்திரன் – செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி திட்டத்தினுடைய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொறியியலாளரான ஷாக்ட்ரியா என்பவரே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்கா இதுவரை காலமும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக மனிதர்கள் நிலவில் நீண்ட காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தையும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷாக்ட்ரியா என்ற விஞ்ஞானி முதலில் மென்பொருள் பொறியியலாளராகவும், பின், ‘ரோபாட்டிக்’ பொறியியலாளராகவும் பணியாற்றி, பின், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கான விண்கலங்களை இயக்குபவராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

இதேவேளை நாசாவின் பெருமைக்குரிய மற்றும் எதிர்பார்ப்பு நிறைந்த திட்டங்களில் ஒன்றான இந்த திட்டம் நிலவில் துணிச்சலாக பல ஆய்வுகளை மேற்கொள்ளவும், செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாக மனிதர்களை கால்பதிக்க வைக்கவும் உதவும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.