;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்!! (PHOTOS)

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது.

காணி விடுவிப்பு, போதைப்பொருள் பாவனை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, முச்சக்கரவண்டி கட்டணமானி பொருத்தாமை உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மதியம் வரை இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், ஐனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சள செனரத், மாவட்ட மேலதிக செயலாளர் (காணி) பிரதேச செயலாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர், வன வள திணைக்களத்தினர், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.